Devaram Hymns of Nellaiyappar Temple

I have been extensively documenting the Kantimati Sameta Nellaiyappar Temple in Tirunelveli. Over the course of 37 episodes, I have delved into the temple's layout, architecture, iconography, and shared various legends and historical details. In this episode, I will focus on the Devaram hymns.

Nellaiyappar temples is a Devara Paadal Petra Sthalam (meaning, a holy site revered in Devaram) from the Pandya region.

Sambandhar has composed 11 verses, as part of the 3rd Tirumurai of Devaram. The  Patikam reference numbers are from 3.092.1 through 3.092.11. (Devaram is classified into Tirumarais and each Tirumurai is sub-divided into Patikams.)

My little knowledge and lack of time do not allow me to translate these divine hymns into English. Hence, they are provided below in the Tamil script.

மருந்தவை மந்திரம் மறுமைநன்
  னெறியவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே
  சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்துதண் புறவினிற் கொன்றைபொன்
  சொரிதர துன்றுபைம்பூஞ்
செருந்திசெம் பொன்மலர் திருநெல்வே
  லியுறை செல்வர்தாமே. 

என்றுமோ ரியல்பின ரெனநினை
  வரியவ ரேறதேறிச்
சென்றுதாஞ் செடிச்சியர் மனைதொறும்
  பலிகொளும் இயல்பதுவே
துன்றுதண் பொழில்நுழைந் தெழுவிய
  கேதகைப் போதளைந்து
தென்றல்வந் துலவிய திருநெல்வே
  லியுறை செல்வர்தாமே.

பொறிகிளர் அரவமும் போழிள
  மதியமுங் கங்கையென்னும்
நெறிபடு குழலியைச் சடைமிசைச்
  சுலவிவெண் ணீறுபூசிக்
கிறிபட நடந்துநற் கிளிமொழி
  யவர்மனங் கவர்வர்போலுஞ்
செறிபொழில் தழுவிய திருநெல்வே
  லியுறை செல்வர்தாமே.

காண்டகு மலைமகள் கதிர்நிலா
  முறுவல்செய் தருளவேயும்
பூண்டநா கம்புறங் காடரங்
  காநட மாடல்பேணி
ஈண்டுமா மாடங்கள் மாளிகை
  மீதெழு கொடிமதியந்
தீண்டிவந் துலவிய திருநெல்வே
  லியுறை செல்வர்தாமே.




ஏனவெண் கொம்பொடும் எழில்திகழ்
  மத்தமும் இளஅரவுங்
கூனல்வெண் பிறைதவழ் சடையினர்
  கொல்புலித் தோலுடையார்
ஆனின்நல் லைந்துகந் தாடுவர்
  பாடுவர் அருமறைகள்
தேனில்வண் டமர்பொழில் திருநெல்வே
  லியுறை செல்வர்தாமே.


வெடிதரு தலையினர் வேனல்வெள்
  ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியதள்
  ஆடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர்
  மாதரை மையல்செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல்வே
  லியுறை செல்வர்தாமே.  

அக்குலாம் அரையினர் திரையுலாம்
  முடியினர் அடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய
  சதுரனார் கதிர்கொள்செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு
  வண்டுபண் முரலுஞ்சோலைத்
திக்கெலாம் புகழுறுந் திருநெல்வே
  லியுறை செல்வர்தாமே.  

முந்திமா விலங்கலன் றெடுத்தவன்
  முடிகள்தோள் நெரிதரவே
உந்திமா மலரடி யொருவிரல்
  உகிர்நுதி யாலடர்த்தார்
கந்தமார் தருபொழில் மந்திகள்
  பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகமழ் திருநெல்வே
  லியுறை செல்வர்தாமே.  


பைங்கண்வாள் அரவணை யவனொடு
  பனிமல ரோனுங்காணா
அங்கணா அருளென அவரவர்
  முறைமுறை யிறைஞ்சநின்றார்
சங்கநான் மறையவர் நிறைதர
  அரிவையர் ஆடல்பேணத்
திங்கள்நாள் விழமல்கு திருநெல்வே
  லியுறை செல்வர்தாமே.  


துவருறு விரிதுகில் ஆடையர்
  வேடமில் சமணரென்னும்
அவருறு சிறுசொலை யவமென
  நினையுமெம் அண்ணலார்தாங்
கவருறு கொடிமல்கு மாளிகைச்
  சூளிகை மயில்களாலத்
திவருறு மதிதவழ் திருநெல்வே
  லியுறை செல்வர்தாமே.   


பெருந்தண்மா மலர்மிசை அயனவன்
  அனையவர் பேணுகல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வே
  லியுறை செல்வர்தம்மைப்
பொருந்துநீர்த் தடமல்கு புகலியுள்
  ஞானசம் பந்தன்சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியா
  டக்கெடும் அருவினையே.

Sundarar has composed one verse, as part of the 7th Tirumurai of Devaram. The Patikam reference number is 7.039.8.

கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
  கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன்
நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
  நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
  தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
  ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 

This article is Part 38 of the series of articles I write about Kantimati Sameta Nellaiyappar Temple. 

Comments

Popular posts from this blog

The Tallest Murugan of Chennai

Little known Nimishamba Temple of Chennai

A 17th century Dargah with healing power - Mount Road Dargah, Chennai, India